அமர்ந்து காத்திருப்பேன்
எந்தன் அப்பாவின் சமூகத்திலே
அவர் பேச நான் கேட்பேன்
அதுதான் என் ஜெப நேரம்
நான் பேச அவர் கேட்பார்
அதுதான் என் ஜெப நேரம்
-
அதிகாலையில் வாஞ்சையோடே
அவர் பாதம் அமர்ந்திருப்பேன்
துதித்திடுவேன் தூயரயே
துரிதமாய் வந்திடுவார் -
அறிக்கை செய்வோம் அவரிடமே
அன்புடன் அணைப்பாரே
பாவங்களை மன்னிப்பாரே
பரிசுத்தம் செய்வாரே -
ஊற்றிடுவேன் பாரங்களை
தேற்றிடும் நேசரிடம்
துடைத்திடுவார் கண்ணீரை
மகிழ்ந்து நான் துதித்திடுவேன் -
பரன் சித்தமே பூமியிலே
நாள்தோறும் செய்யணுமே
தேவராஜ்யம் வளரனுமே
தினம் அருள் தாரும் என்பேன்