தேவனே உந்தன் திரு சமூகம்
என் முன்னே (என்னோடு)
என்றும் செல்லட்டுமே
ஆறுதல் எந்தன் வாழ்வினிலே
அன்பரே உந்தன் சமூகமே
-
பாதை தெரியாத குருடனைப் போல்
பேதை தடுமாறும் வேளையிலும்
வழி காட்டி போதித்து நடத்திடும்
உந்தன் சமூகம் போதுமையா -
சத்துரு சோதனை பெருகுவதால்
சக்தி இழந்து தியங்குகையில்
சத்துவம் தந்து என்னை தேற்றும்
ஜெய வீரனாய் மாற்றும் சமூகமே -
பசி தாகத்தால் என் தேகமும்
சோர்ந்து தளரும் வேளையிலும்
வானும் மலையும் திறந்துமே
பசி தாகம் தீர்க்கும் சமூகமே -
கண்ணீரின் பள்ளம் கடக்கையிலே
கண்ணீரால் படுக்கை நனையும் போது
கண்ணீரை நீரூற்றாய் மாற்றி என்றும்
களி கூரப் பண்ணும் உம் சமூகமே -
மேக மீதினில் நீர் வரும் நாள்
விண்ணிலே உம்மையும் சந்திப்பேனே
உந்தனின் சாயலாய் என்னை மாற்றும்
உந்தன் சமூகம் தாரும் ஐயா